மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புகளை கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேல்
மாகாண பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பெப்ரவரி
25 ஆம் திகதி அனைத்து அரசு மற்றும் அரசாங்கத்தால்
அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கும் 2021 ஆம் கல்வியாண்டுக்கான முதல்
தவணை விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னர் தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் 15 ஆம் திகதி மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதாக இல்லையா என்பது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.a