நாட்டில் இன்று மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து,நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 68,193 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும் 1133 பேர் குணமடைந்த நிலையில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 62,594 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 5,256 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.