தற்பொழுது நிலவும் வறட்சியான காலநிலைக்கு மத்தியில் சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தை வரையறுக்கும் நிலை ஏற்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
சில
பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடனான நீரை விநியோகிக்கக்கூடிய நிலை ஏற்படும்
என்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச்
சபை தெரிவித்துள்ளது.
இதனால்
முடிந்தவரை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு
சபையின் தொடர்பாடல் பிரிவின் முகாமையாளர் சரத் சந்திர முத்துபண்டா
பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது
கடும் வறட்சியான காலநிலை நிலவுவது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் நீர்த்தேக்கங்களில் நீர் குறைந்து வருகின்றது.
இந்த
நிலை தொடர்ந்து நீடிக்குமாயின், தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்களுக்கு நீரை விநியோகிப்பதில் நெருக்கடி
நிலை ஏற்படும் என்றும் சபையின் தொடர்பாடல் பிரிவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.