இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.
60 வயதான ஆண் ஒருவரும்,78 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண்,கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தார்.