சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கும் இந்த வாரத்துக்குள் அனுமதி கிடைக்கும் என மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அவசர பாவனைக்காக இந்த தடுப்பூசியை பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துள்ளதால் நாளை(27) அத்தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் 65 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும்,அதற்கு தேவையான தடுப்பூசி தொகை இறக்குமதி செய்யப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.