கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடி பரிட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன், 11 பாடவிதானங்களுக்கான முன்னோடி பரீட்சைகள் இடம்பெற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த பணிகள் ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உயர்தர பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.