அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி வரையில் மேல் மாகாணத்தை தனிமைப்படுத்துமாறு பொது சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு,பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பயண கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ்,புத்தாண்டை கொண்டாடுவதற்காக மக்கள் பிற மாவட்டங்களுக்கு செல்ல கூடுமெனவும் இதனால் கொரோனா வைரஸ் மேலும் பரவக் கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.