பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் இன்று முதல் பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களை குறைக்கவும்,கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் உரிய முறையில் பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறிவதற்காக சிவில் உடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.