முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தனியார் ஒருவருடைய காணியில் இருந்த குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.