சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,091 ஆக அதிகரித்துள்ளதென சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் மாத்திரம் 183 தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ளனரென சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்ட 183 பேரும் மஹர சிறைச்சாலையில் உள்ளவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெலிக்கடை சிறைச்சாலையில் 386 பேருக்கும் கொழும்பு சிறைச்சாலையில் 157 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை தொற்றுக்குள்ளானவர்களுள் 119 பேர் குணமடைந்துள்ளனரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.