இலங்கையில்
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று மாத்திரம் 9
பேர் உயிரிழந்துள்ளனர்.
என
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில்
கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் அதிகூடிய
உயிரிழப்புகள் நேற்றே பதிவாகியுள்ளது.
5 ஆண்களும்
4 பெண்களும் நேற்றைய தினம் பலியாகி உள்ளனர்.இவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.இவர்களில் மூன்று
பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.
இதன்படி
நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில்
70 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் சிக்கி கடந்த ஒரு மாதத்தில் (அக்டோபர்
22 - நவம்பர் 21) மாத்திரம் பலியாகியுள்ளனர்.
நேற்றைய
தினம் மரணமடைந்தவர்களின் விபரங்கள் பின்வருமாறு,
கொழும்பு
2 கொம்பனித்தெரு பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் கொழும்பு
தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.இவரது மரணத்துக்கான காரணம்,அதிக இரத்த அழுத்தம்
ஏற்பட்டமை, நிமோனியா காய்ச்சல் மற்றும் திடீர் அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டி
பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் கொழும்பு
தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.அவரது மரணத்துக்கான காரணம் அதிக இரத்த அழுத்தம்,நீரிழிவு நோய் மற்றும் கொரோனா
தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு
9 தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் கொழும்பு
தேசிய வைத்தியசாலையில் பலியாகியுள்ளார்.இவரது உயிரிழப்புக்கான காரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு
10 மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர் வீட்டில்
திடீரென மரணமடைந்துள்ளார்.அவரது மரணத்துக்கான காரணம் கொரோனாவுடன் ஏற்பட்ட மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு
10 மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் வீட்டில்
திடீரென உயிரிழந்துள்ளார்.இவரது மரணத்துக்கான காரணம் நீரிழிவு அதிக இரத்த அழுத்தம்
மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு
13 கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் வீட்டில்
திடீரென மரணமடைந்துள்ளார்.இவரது உயிரிழப்புக்கான காரணம் கொரோனாவால் ஏற்பட்ட மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு
6 வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கொழும்பு
தேசிய வைத்தியசாலையில் வைத்து கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு கொழும்பு கிழக்கு முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு பலியாகியுள்ளார்.இவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல்,பக்டீரியா தொற்று மற்றும் திடீர் அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பட்டி
பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் கொழும்பு
தேசிய வைத்தியசாலையில் வைத்து கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட
நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார்.அவரது இறப்புக்கான காரணம் கொரோனாவால் ஏற்பட்ட உக்கிரமான நிமோனியா காய்ச்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு
மாவட்டத்தை சேர்ந்த 76 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு கொழும்பு தேசிய புற்றுநோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு பலியாகியுள்ளார்.இவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் மற்றும் குருதி நஞ்சடைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
இலங்கையில் நேற்றும் 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது என அரச தகவல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய
கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரை
16256 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதையடுத்து
மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19771 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்
13590 பேர் குணமடைந்துள்ளனர்.6098 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.