கொழும்பு யூனியன் பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த 93 இந்தியர்களில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதில் 9 பேர் பிங்கிரிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனரெனவும் 44 பேர் ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இவர்களுடன் பணியாற்றியவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.