இதற்கமைய இன்றைய தினம் 8 பேர் உயிரிழந்துள்ளனரென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பெண்களும் 4 ஆண்களுமே இன்று உயிரிழந்துள்ளனர்.இதற்கமைய கொழும்பு 13 சேர்ந்த 67 வயதுடைய பெண்,தெமட்டகொடையைச் சேர்ந்த 54 வயதுடைய பெண், மருதானையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் மட்டக்குளியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆண்,கொம்பனித்தெருவை சேர்ந்த 83 வயதுடைய ஆண், மாளிகாவத்தையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண், 70 வயதான கொழும்பு மெகசின் சிறைக்கைதி ஒருவருமே இவ்வாறு கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.