டயகம-நெட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று(24) இனங்காணப்பட்டுள்ளார் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மெனிங் சந்தையில் தொழில் புரிந்த 72 வயதுடைய இந்த நபர் கடந்த 22ஆம் திகதியன்று நெட்பொன் தோட்டத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் குறித்த நபரிடம் கினிகத்தேனை,கலுகல்ல பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு அருகாமையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதன் முடிவுகளின் போதே இவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரை அழைத்து செல்வதற்காக அம்பியூலன்ஸ் வந்தபோதும் தோட்ட பாதை குன்றும் குழியுமாக இருந்தமையால் வீட்டுக்கு அருகிலேயே ஆம்புலன்சை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.இதனால் தொற்றுக்குள்ளான நபர் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அம்பியூலன்ஸ் ஏறிய பின்னர் ஹம்பாந்தோட்டையில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.