நாடாளுமன்றம்
நாளை இரண்டு மணி நேரம் மட்டுமே
கூட உள்ள நிலையில் இதன்
போது சுகாதர அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு புதிய
விதிமுறைகளை முன்வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை
10 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே
நாடாளுமன்றம் கூடும் என்றும் இதன் போது சுகாதார
அமைச்சர் சமர்ப்பித்த மருத்துவ கட்டளைச் சட்டத்தின் இரண்டு விதிமுறைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நாடாளுமன்ற பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட உள்ளது.
இதன்போது
இரண்டு மற்றும் மூன்றாவது வாசிப்பை தொடர்ந்து 2020 ஆம் நிதியாண்டுக்குரிய சேவை செலவினங்களுக்காக
நிதி அமைச்சர் சமர்ப்பித்த நிதி ஒதுக்கீடு பிரேரணையை
அடுத்த மாதம் 12ஆம் திகதி நிறைவேற்றுவதற்கு
சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.
அதேவேளை
நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் தினத்தன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தவிர வேறு எவரும்
நாடாளுமன்றத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.