நாட்டின் 21 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் ஜெயருவன் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டலுக்கு அமைய மக்கள் செயற்படுவார்களாயின் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எற்கனவே பதிவாகியுள்ள நோயாளர்களை தவிர கொழும்பு மாவட்டத்தில் 160 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 140 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஏனைய மாவட்டங்களை பொறுத்தவரையில் சில மாவட்டங்களில் ஒருவர் மாத்திரம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
4 மாவட்டங்களில் இவ்வாறு ஒருவர் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நான்கு மாவட்டங்களில் இருவர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் பெரன்டிக்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்து டன் நாட்டை முடக்கும நிலை உருவாகவில்லை என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.