சிலாபம் ஆராய்ச்சிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி இதுவரை கண்டறியப்படவில்லை.மாணவன் சிலாபம் நகரில் நடத்தப்படும் சில தனியார் பகுதிநேர வகுப்புகளிலும் கடந்து கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான மாணவன் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் தமது வீடுகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.