திவுலபிட்டிய கொரோனா கொத்தணியில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 36 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 15 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி திவுலபிட்டிய கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1346 ஆக அதிகரித்துள்ளது.