நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் 8 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதோடு பேலியகொட மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 156 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.