இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை(22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய கல்வி வலயத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 27ம் திகதி வரையில் 39 மத்திய நிலையங்களில் 391 பேரினால் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து பரிசோதகர்களுக்கும் விடைத்தாள் திருத்தும் பணி களுக்கு வருகை தருமாறு குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஏதாவது விசாரணைகள் இருப்பின்
011-2785 231, 011-2785 216, 011-2784 037என்று இலக்கங்களுக்கு அழைப்பு விடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.