கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக வர்த்தக மையத்தின் மேற்கு கோபுரத்தின் 32 ஆம் மாடியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கே தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர் இறுதியாக குறித்த கட்டிடத்துக்கு ஒக்டோபர் 8ஆம் திகதி வருகை தந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.