உயர்தரப் பரீட்சையில் பொது சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் பொது சாதாரண பரீட்சையில் தோற்றுவித்து குறித்த பாடத்தில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றவர்கள் மீண்டும் பரீட்சையில் தோற்ற வேண்டிய அவசியமில்லை என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அடுத்த பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கு அந்த புள்ளி போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.