இலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடைதொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 58 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 1, 850 ஆக அதிகரித்துள்ளது.