விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் விஷேட பாதுகாப்பின் கீழ் சுகாதார பாதுகாப்பு அங்கி அணிந்து அவர் பாராளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
மேலும் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டலுக்கு அமைய பாராளுமன்றில் விசேட ஆசனம் ஒன்றை அவருக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பொது நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவிற்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.