பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அமைச்சு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பில் நேற்று(14) எழுத்து மூலமான கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து பல்கலைக்கழகத் துணை வேந்தர்களும் அதற்கு சார்பாக பதில் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் ஸ்ரீ ஜெயவர்தனபுர,காலி, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் இந்த நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.