கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மட்டு.அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் வைத்து இன்று நியமனப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 30,000 வாக்குகளை பெற்ற அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டிருந்தார்.
இதற்கமைய கருணாவுக்கு இப்பதவியை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.