களுத்துறையில் இருந்து அளுத்கம பகுதிக்கு பொது போக்குவரத்து பஸ்சில் பயணம் செய்த அரசு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 49 வயதுடைய பெண் ஒருவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞனை போலீசார் இன்று(30) கைது செய்துள்ளனர்.
பஸ்ஸில் பயணம் செய்தவாறு பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து அளுத்கம பொலிஸார் பஸ்ஸை நிறுத்தி குறித்து 24 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கித்துல்கலை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் அவர் பணியாற்றி வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.