ஜேர்மனியில் நடைபெற்ற தடகள போட்டியில் யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 10.16 வினாடிகளில் நிறைவுசெய்து இலங்கை மற்றும் தெற்காசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை குறித்து விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விடுத்துள்ள செய்தியில், இலங்கை மற்றும் தெற்காசிய மட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை அறிந்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும்,இந்த சாதனை இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரையும் பெருமையடைய செய்துள்ளது எனவும் கூறியுள்ளார்.மேலும் தனது வாழ்த்துக்களையும் அந்த வீரருக்கு தெரிவித்துள்ளார்.