அண்மைக்காலமாக பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது .இந்த மாதத்தில் கடந்த 17 நாட்களில் நாட்டில் 506 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் கண்டி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலைக்கு மத்தியில் தமது வீடுகளுக்கு அருகாமையில் பாடசாலை உள்ளிட்ட சுற்றாடல் பகுதியில் டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும் வகையில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என தொற்றுநோய் விசேட வைத்தியர்கள் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.