தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
இந்தியாவில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை.
எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் ஆயிரம் நிலவே வா பாடல் இவரை எங்கேயோ கொண்டு சென்றது.
அத்தோடு ரஜினி,கமல் விஜய்,அஜித், சல்மான்கான், சிரஞ்சீவி,விஷ்ணுவர்தன் என இவர் இந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுக்கும் பாடியுள்ளார்.
இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.அதிலும் இவரும் இளையராஜாவும் இணைந்தால் ரசிகர்களுக்கு விருந்து தான்.
இந்த அளவிற்கு பேர் புகழைக் கொண்ட இவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து அவர் பூரண குணமடைய தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் பிரார்த்தனை செய்து வந்தனர்.
பல திரையுலக பிரபலங்கள் இவருக்காக கண்ணீர் வடித்தனர். ரசிகர்களும் மிகவும் மன வருத்தத்துடன் இருந்தனர். கொஞ்சம் உடல் நலம் தேறிவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.