உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் தற்போது வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் சிறிய தீவாகிய எமது நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவ்வாறு இல்லாவிடின் கடந்த மாதங்களைப் போன்று மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.