யாழில் இருந்து சட்டவிரோதமாக பெருந்தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை அனலைதீவு கடற்பரப்பில் வைத்து இன்று கைது செய்துள்ளதாக கடற்படையினர்
தெரிவித்துள்ளனர்.
5 கிலோ மற்றும் 500 கிராம் நிறையுடை, சுமார் 6 கோடி 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முற்பட்ட போதே இவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
மாதகலைச் சேர்ந்த இருவரும் தரகுப் பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைகளின் பின் யாழ். சுங்கத்
திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.