கடனட்டை (கிரடிட் கார்ட்), தங்க நகை அடகு என்பவற்றுக்கு அறவிடப்படும் வட்டிவீதத்தைக் குறைப்பதற்கு, இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
மத்திய வங்கியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, கடனட்டைகளில் அறவிடப்படும் அதிகபட்ச வட்டி விகிதம் நூற்றுக்கு 18 சதவீதம் வரையிலும் தங்க நகை அடகுக்காக அறவிடப்படும் அதிகபட்ச வட்டி வீதம் நூற்றுக்கு 10சதவீதம் வரையிலும் குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.