சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனை எரித்ததை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.
சுவீடனின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்மோவில் பல மணி நேரங்களாக நடந்த அந்த கலவரத்தில், வாகனங்களுக்கு தீயிடப்பட்டது. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் அங்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் குர் ஆன் எரிக்கப்பட்ட அதே இடத்தில் போராட்டம் நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர வலதுசாரி டென்மார்க் அரசியல்வாதியான ராஸ்முஸ் பலுடான் குர் ஆன் எரிப்பு பேரணியை முன்னெடுத்தார்.
அவரை கலந்து கொள்ள விடாமல் பொலிஸார் வெள்ளிக்கிழமை தடுத்தனர்.
ஆனால், அவர் ஆதரவாளர்கள் இதனை பொருட்படுத்தாமல் குர் ஆன் எரிப்பு பேரணியை நடத்தினர்.
பலுடான் ஸ்வீடனுக்குள் நுழைவதை டென்மார்க் எல்லையில் தடுத்த பொலிஸார், அவர் சுவீடனில் நுழைய இரண்டு ஆண்டுகள் தடை விதித்தனர்.