ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைத்துக்கொண்டு பரந்துபட்ட கூட்டணியின்கீழ் மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது என்று அக்கட்சியின் உறுப்பினர் ஜே.சி. அலவதுவல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ”ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி குறுகிய காலப்பகுதிக்
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஓர் கூட்டமைப்பு அதில் கட்சிகள் இணையலாம் ஐக்கிய தேசியக்கட்சி இணைந்தால்கூட அக்கட்சியையும் இணைத்துக்கொண்டு பரந்தப்பட்ட கூட்டணியின்கீழ் தேர்தலை சந்திக்கலாம் எனவும் அது மேலும் வலுவாக இருக்கும் எனவும் ஐ.தே.க. எம்முடன் இணைவதை நாம் வரவேற்போமேதவிர ஒருபோதும் எதிர்க்கமாட்டோம் எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் சில குறைப்பாடுகள் உள்ளன அவை சீர்செய்யப்படவேண்டும் எனவும் ஆனால் ஜனாதிபதியின் பதவிகாலம் உட்பட மேலும் சில விடயங்கள் மாற்றியமைக்கப்படக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.