அதனடிப்படையில் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக நேற்று ரணில் விக்ரமசிங்க தலைமையில் அவரது கொள்ளுபிட்டிய வீட்டில் ஒன்றுகூடியிருந்தனர்.இருப்பினு ம் இறுதித் தீர்மானத்திற்கு வர முடியவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தலைமைத்துவம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்சியின் தேசிய ஒருங்கமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, பிரதி பொதுச் செயலாளர் ருவன் விஜேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.