Monday, July 27, 2020
ராஜாங்கனை, கொட்டாவ தர்மபால, அனுராதபுர டி.எஸ். சேனநாயக்க ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் பாடசாலைகளை ஆரம்பிக்கின்றது, எனினும் முதன்முறையாக பாடசாலைகள் மாணவர்கள் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
கொழும்பில் நேற்று (26)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே தற்போதைய நெருக்கடி தொடர்பாக உரையாற்றினார். இந்த காலகட்டத்தில் நாட்டில் முதல்முறையாக பாடசாலை மாணவர்கள் நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், எனினும் பாடசாலைகள் மீளத் திறக்கும்போது அவை தொடர்பாக ஆராய போதுமான ஏற்பாடுகள் இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த சூழ்நிலையில் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு சுகாதார பிரச்சினைகள் குறித்து தெளிவு இல்லை என்றும் பாடசாலைகளுக்கு வந்து செயல் முறைகளைக் கண்காணித்த ஒரு குழு பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மட்டுமே அவர்கள் தற்போது சில கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் கோரிக்கைகளை ஏற்று அவற்றை நிறைவேற்ற அரசாங்கம் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.