காற்று வெளியேறிய கால்பந்து போன்ற வடிவில் அந்த முட்டை படிமம் குறித்து பல வருடங்களாக அறிய முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறினர்.
தற்போது, 68 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெரிய கடல் ஊர்வன உயிரினத்தின் முட்டையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுவே உலகின் மிகப்பெரிய ஊர்வன உயிரினத்தின் முட்டை என நம்பப்படுகிறது.
இந்த 'மர்ம முட்டை' சிலி நாட்டில் 2011ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இருப்பினும், 2018ஆம் ஆண்டில்தான் இது காற்று வெளியேறிய ஒரு முட்டை என்பது கண்டறியப்பட்டது.