2020. 06. 29, திங்கட்கிழமை முதல் இயங்கும் தனியார் கல்வி நிறுவன வகுப்புகளுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
2020. 06. 10 அன்றைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவிப்பின்படி -
*ஒரு வகுப்பில் கலந்து கொள்ளக்கூடிய அதிகபட்ச மாணவர்கள் 100 பேர் என வரையறுக்கப்பட்டுள்ளது.
*சாதாரண சூழலில் குறிப்பிட்ட ஒரு தொகை மாணவர்களை அமர்த்தக்கூடிய ஒரு வகுப்பில், தற்போதைய சூழலில் அந்த தொகையிலும் பாதி அளவு தொகையான மாணவர்களை மட்டுமே அமர்த்திக் கற்பிக்க முடியும்.
இந்த வரையறைகளுக்கு உட்பட்டு தனியார் வகுப்புக்களை இயக்கும் போது கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றியே இயக்க வேண்டும்.