தனிமைப்படுத்தப்பட்ட 141 பொலிஸ் உத்தியோகத்தர்கள்,விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கல்லடி காவல்துறை பயிற்சி முகாமில் அவர்கள் திங்கட்கிழமை முதல் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14
பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிவரும் பொலிஸ் உயர் அதிகாரி தொடக்கம் சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்கள் வரையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.